என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விடுப்பு விண்ணப்பம்"
- உத்தர பிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கோபமான மனைவி போன் செய்யும்போது தன்னிடம் பேசுவதில்லை என்பதே காரணம்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. அவர் மௌ மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான மனைவி, போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் பலமுறை அவருக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர், தனது தாயிடம் போனை கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாகவும் விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் படித்த உதவி கண்காணிப்பாளர், ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கி உள்ளார்.
கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
உத்தர பிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்